கடலோடு உறவாடும்
அலைபோல் ‍‍_நீ
எனக்குள் இருக்கிறாய்

நிலவோடு தவழ்ந்திடும்
மேகம் போல் _நீ
எனக்குள் இருக்கிறாய்

மலரோடு மகிழ்ந்திடும்
வண்டைப்போல‌_நீ
எனக்குள் இருக்கிறாய்

இரவோடு மின்னிடும்
உடுவைப்போல்_நீ
எனக்குள் இருக்கிறாய்

பூகூடைருக்கும் நார்போல‌
_நீ
எனக்குள் இருக்கிறாய்
கண்ணுக்கு துணையாகும்
இமைபோல்_நீ
எனக்குள் இருக்கிறாய்

நித்திரையில் கனவாய்
நினைவுக்குள்_நீ
எனக்குள் இருக்கிறாய்

கற்பனையில் உன்னுருவம்
கலையாத ஓவியமாய் _நீ
எனக்குள் இருக்கிறாய்


உருகும் மெழுகில்
என்னில் ஒளியாக‌ _நீ
எனக்குள் இருக்கிறாய்

சிப்பிக்குள் முத்தாய்
சிந்தாமல் சிதராமல்_நீ
எனக்குள் இருக்கிறாய்

கவிதைக்குள் இலக்கணமாய்
காதல் இள்வரசனாய்_நீ
எனக்குள் இருக்கிறாய்

மொத்ததில் நாமிருவரும்
ஈருடல் ஆனாலும்
எம் இரு உயிரும்
ஒன்றுதான்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்