வெறுமையாய் இருந்த உள்ளத்தில் வெள்ளமாய் வந்து சேர்ந்தவனே!!♥ அலைக்கழித்த நெஞ்சத்தை அமைதிப்படுத்த என்ன செய்தாய்!!!♥ அவதிப்பட்ட என் உள்ளத்தை அடக்கி எப்படி ஆட்சி செய்தாய்!!!♥ வதைக்கப்பட்ட என் மனதை உன் வசப்படுத்த என்ன வசியம் செய்தாய்!!!♥ இப்படியெல்லாம் என்னுள்ளத்தை உரிமையாக்கிக் கொண்டு என் விழிகளுக்கு மட்டும் ஏன் வலி கொடுத்தாய்!!!♥ உன் முகம் கண்டு காதல் செய்ய துடித்த என் விழிகளுக்கு மட்டும் ஏன் வலி கொடுத்தாய்!!!
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
கடலோடு உறவாடும் அலைபோல் _நீ எனக்குள் இருக்கிறாய் நிலவோடு தவழ்ந்திடும் மேகம் போல் _நீ எனக்குள் இருக்கிறாய் மலரோடு மகிழ்ந்திடும் வண்டைப்போல_நீ எனக்குள் இருக்கிறாய் இரவோடு மின்னிடும் உடுவைப்போல்_நீ எனக்குள் இருக்கிறாய் பூகூடைருக்கும் நார்போல _நீ எனக்குள் இருக்கிறாய் கண்ணுக்கு துணையாகும் இமைபோல்_நீ எனக்குள் இருக்கிறாய் நித்திரையில் கனவாய் நினைவுக்குள்_நீ எனக்குள் இருக்கிறாய் கற்பனையில் உன்னுருவம் கலையாத ஓவியமாய் _நீ எனக்குள் இருக்கிறாய் உருகும் மெழுகில் என்னில் ஒளியாக _நீ எனக்குள் இருக்கிறாய் சிப்பிக்குள் முத்தாய் சிந்தாமல் சிதராமல்_நீ எனக்குள் இருக்கிறாய் கவிதைக்குள் இலக்கணமாய் காதல் இள்வரசனாய்_நீ எனக்குள் இருக்கிறாய் மொத்ததில் நாமிருவரும் ஈருடல் ஆனாலும் எம் இரு உயிரும் ஒன்றுதான்